மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு? – 7 வது ஊதியக்குழு அறிக்கை!

0
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு? - 7 வது ஊதியக்குழு அறிக்கை!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு? - 7 வது ஊதியக்குழு அறிக்கை!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு? – 7 வது ஊதியக்குழு அறிக்கை!

ஜனவரி 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 % ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இதனால் அவர்களின் மாத சம்பளம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதற்கான கணக்கீடு வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

அதிகரித்து வரும் பணவீக்கத்தை ஈடுகட்ட, அகவிலைப்படி பொதுவாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிக பலனை அடைய இருக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வாழ்க்கை செலவை சரிசெய்யவும், அவர்களின் அடிப்படை ஊதியம் பாதுகாக்கவும் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அகவிலைப்படி சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மதிப்பாய்வு செய்யப்பட்டு மீண்டும் அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி உள்ளுர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அதேபோல், அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு (டிஆர்) அடிப்படை ஓய்வூதியத் தொகையில் கணக்கிடப்படும். ஜனவரி 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய உயர்வால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று மார்ச் 30, 2022 அன்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஏ உயர்வு என்பது அரசு ஊழியர்களின் சம்பள உயர்வாகும். எனவே, டிஏவில் 3% உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியரின் சம்பளம் அதிகரிக்கப்படும்.

ஜூனியர் நிலை மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ஆண்டுக்கு ரூ.18,000 ஆகும். முன்னதாக 31% என்ற விகிதத்தில், மத்திய அரசு ஊழியர் ரூ.5,580 டிஏ பெறுவார். இப்போது அது 34% ஆக உயர்த்தப்பட்ட பிறகு, அதே அரசு ஊழியர் இப்போது DA 6,120 ரூபாய் பெறுவார். இதனால், அகவிலைப்படி உயர்வால், அவரது சம்பளம், 540 ரூபாய் உயர்ந்துள்ளது. புதிதாக பணியமர்த்தப்பட்ட வகுப்பு I அதிகாரிக்கு, அடிப்படை ஊதியம் ரூ.56,100. டிஏவில் 3% உயர்வு என்பது முந்தைய ரூ.17,391-ல் இருந்து ரூ.1,683-ல் இருந்து ரூ.19,074-ஆக உயர்த்தப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!