தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி உள்ளுர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பெரிய கோயிலில் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தல திருவிழாக்கள் போன்றவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏனெனில் விழாக்களில் கலந்து கொள்ள வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். அவர்களுக்கு ஏதுவாக அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த வகையில் தற்போது தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயிலில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இத்திருத்தலத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020ம் ஆண்டு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது. காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இக்கோயில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற பெருமையை பெற்றது தஞ்சை பெரிய கோயில். சிறந்த கட்டிட கலைக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்கி வருகிறது. புகழ் பெற்ற பெரிய கோயிலை காண வெளி மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகை புரிவர். இது ஆண்டுதோறும் மதுரை சித்திரை திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் இந்த தேரோட்ட விழா நடைபெறவில்லை தற்போது பாதிப்புகள் குறைந்த நிலையில் தேரோட்டம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து வரும் ஏப்ரல் 13ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.