தீபாவளி பரிசு: பிரதமரால் 75,000 பேருக்கு பணி நியமனம் – கொண்டாட்டத்தில் இளைஞர்கள்!!
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு வேலைவாய்ப்பின்மை என்பது அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 75000 பேருக்கு வேலை வாய்ப்பு கடிதங்களை பிரதமர் வழங்க உள்ளார்.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்களில் ஏராளமானோருக்கு வேலைகள் பறிபோனது. மேலும் அரசாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அனைத்து துறைகளும் மீண்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்திருந்தார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் வருகிற 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை இளைஞர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் 75000 இளைஞர்களுக்கு பரிசு வழங்க இருக்கிறார். அதன்படி தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக பிரதமர் Video conferencing மூலமாக இளைஞர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்போது 75000 இளைஞர்களுக்கு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு கடிதங்கள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓமைக்ரானின் 300-க்கும் மேற்பட்ட துணை வைரஸ்கள் – WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
இதில் இளைஞர்களுக்கு உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தபால் துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, வங்கி, சுங்கம் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்.