ஓமைக்ரானின் 300-க்கும் மேற்பட்ட துணை வைரஸ்கள் – WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸில் இருந்து உருவான ஓமைக்ரான் பல நிலைகளை கடந்து உருமாற்றம் வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு ஓமைக்ரான் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
ஓமைக்ரான்:
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா எனும் வைரஸ் தொற்று உலக நாடுகளை தற்போது வரை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் அனைத்து நாடுகளிலும் பரவி வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இந்த வைரசால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். இதற்கு மத்தியில் இந்த கொரோனா வைரஸானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வந்தது. முதலில் டெல்டா பிளஸ் வகை வைரஸ் பரவ தொடங்கியது. இது இரண்டாம் அலை கொரோனா பரவலை ஏற்படுத்தியது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த இரண்டாம் அலை டெல்டா பிளஸ் வைரஸ் உயிரிழப்புகளை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த வைரஸில் ஒன்று தான் ஓமைக்ரான். இந்த வைரஸ் முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இது வேகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்தனர். மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களுக்கும் ஓமைக்ரான் வைரஸ் பரவியது.
தமிழக பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.1050 கோடி கூடுதல் ஒதுக்கீடு – முதல்வருக்கு குவியும் வாழ்த்து!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சமீப காலமாக சிங்கப்பூரில் ‘எக்ஸ்பிபி’ வகை ஓமைக்ரான் பரவி வருவதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் 300க்கும் மேற்பட்ட ஓமைக்ரானின் துணைப் பிரிவுகள் உலகளவில் பரவி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை (~76%) பிஏ.5 துணைப் பிரிவுகள் WHO கூறுகிறது. இந்த அறிவிப்பு தற்போது மக்களிடையே அச்சத்தை உண்டு செய்துள்ளது.