தமிழக தனியார் பள்ளிகளில் 75% கல்விக்கட்டணம் வசூல் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 2020-2021ம் கல்வியாண்டில் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயின்றவர்களுக்கு 75% கல்வி கட்டணம் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கல்விக்கட்டணம்:
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க அரசு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அதன் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி பயிலலாம். இதற்கான முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கிறது. ஆண்டுதோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெறுகின்றனர். 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் எனவும் குழந்தையின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளது.
Airtel நிறுவனத்தின் ரூ.300க்கும் கீழ் குறைந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!
இந்த கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2020 – 21ம் கல்வியாண்டில் தனியார் பள்ளியில் கல்வி பெற்ற மாணவர்களுக்கு 75% கல்வி கட்டணத்தை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர், இந்த நேரத்தில் தனியார் பள்ளிகள் கால் கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோர்களை வலியுறுத்தியது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? ஓமிக்ரான் வைரஸால் பெற்றோர்கள் கோரிக்கை!
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது தற்போது நிலவி வரும் பெருந்தொற்று சூழ்நிலையில் பெற்றோர்களின் நலன் கருதி 75% கல்வி கட்டணத்தை வசூல் செய்யுமாறு நீதிமன்றம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 75% கல்வி கட்டணத்தை வழங்க ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் அரசாணை வெளியிட்டுள்ளது.