தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? ஓமிக்ரான் வைரஸால் பெற்றோர்கள் கோரிக்கை!
பல நாடுகளில் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகளை பல நாடுகள் அறிவித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பழையபடி வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறைக்கு மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல்
தென் ஆப்பிரிக்காவில் சென்ற வாரம் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. உலக சுகாதார ஆய்வு அமைப்பு, இது மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும், உலகின் சில பகுதிகளில் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் நேற்று அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அறிவித்து விட்ட பிறகும் கூட இன்னும் தமிழகத்தில் பள்ளிகளை திறந்து மாணவர்களை பக்கத்தில் உட்கார வைத்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதே போல் திரையரங்குகள் 100 சதவீத ரசிகர்களுடன் திரையிடப்பட்டு வருகிறது.
டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மேலும் இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு சென்று பாடம் படிக்க வேண்டிய நிலையில் மாணவ, மாணவிகள் உள்ளனர். இத்துடன் பேருந்து போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போதும் மாணவ, மாணவிகள் கூட்டத்தில் தான் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி பாதுகாப்பற்ற நோய் பரவல் காலத்தில் மாணவ, மாணவியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று பல பெற்றோர்கள் மிகுந்த வருத்தத்துடன் கூறுகின்றன.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு – CEO முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று கூறியுள்ளார். அத்துடன் அண்டை நாட்டில் தற்போது பரவி வரும் வரும் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவலை நினைத்துப் பார்த்து, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலைப்படுகிறார்கள். அதனால் தமிழகத்தில் குறைந்தபட்சம் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்காவது வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் முறைக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளன.