தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு – CEO முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - CEO முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - CEO முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு – CEO முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு ஒரே பணியில் பணியாற்றுவோருக்கு இனி ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பதவி உயர்வு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளும் பாடங்கள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் புதிய பணி நியமனங்கள் ஏதும் நடைபெறவில்லை. மேலும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் உள்ளிட்ட எவ்வித கலந்தாய்வுகளும் நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வருடம் அரசின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதமும் அதிகரித்துள்ளது.

டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை – RBI பட்டியல் வெளியீடு! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அதனால் அரசு நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை தேவை அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதனால் விரைவில் ஆசிரியர் தகுதிதேர்வுகளை நடத்தி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
மேலும் கலந்தாய்வுகளை நடத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதி கொடுத்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் நாளை வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – வெதர்மேன் அறிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி சமூக அறிவியல் 30 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வரும் சீனிவாசன் என்பவர் பதவி உயர்வினை உரிமை விடல் செய்துள்ளார். இந்த நிலையில் இவர் பணி நிறைவு செய்தமையை அடுத்து ஊக்க ஊதிய உயர்வுக்கு வேண்டி விண்ணப்பித்துள்ளார். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கையில் பணித்துறப்பு செய்து விட்டு 30 ஆண்டுகள் ஒரே பதவியில் இருப்பவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியற்றவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!