Post Office மாதாந்திர வருமான திட்டம் – 6.6% வட்டி! முழு விபரங்கள் இதோ!
மத்திய அரசு அஞ்சல் துறை மூலம் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் மாதாந்திர வருமானம் பெறும் வகையில் 6.6% வட்டி வழங்கும் மாத வருமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மாதாந்திர வருமானம்:
மக்கள் அனைவரும் தற்போது தங்களது வருமானத்தை ரியல் எஸ்டேட், நகை, சிட் ஃபண்ட், ஷேர் மார்கெட் என்று பல்வேறு விதமாக முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் அவ்வளவு பாதுகாப்பானதா என்று யோசித்தால் அனைத்திலும் ஏதேனும் ஒரு சட்டசிக்கல் இருந்து தான் வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் எதையும் நம்பி முதலீடு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவது அஞ்சல் துறை முதலீடு என்றே கூறலாம்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி காய்கறிகளும் விற்பனை!
ஏனெனில் அஞ்சல் துறை மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில் சாதாரணம் மக்களுக்கும் உதவும் வகையில் அஞ்சல் துறையில் ஒரு சிறந்த மாதாந்திர வருவாய் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் முதலீடு செலுத்தலாம். இந்த அத்திட்டத்தை தனிநபர் கணக்கு (Single Account) மற்றும் கூட்டு கணக்கு (Joint Account) தொடரலாம். தனிநபராக இந்த கணக்கை தொடர்ந்தால் 4.5 லட்சம் முதலீடு செலுத்த வேண்டும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.29 முதல் அலுவலகங்கள் திறப்பு!
இத்திட்டத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களது வருமானத்தை சேமிக்கும் விதமாக கூட்டுக் கணக்காக தொடர்ந்தால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டின் மெச்சூரிட்டி காலம் 5 வருடங்கள் ஆகும். அதாவது இந்த 5 ஆண்டுகளுக்கு இடையில் பணம் பெற முடியாது. மேலும் நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 80சி – ன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.