தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி காய்கறிகளும் விற்பனை!
தமிழகத்தில் காய்கறி விலை அதிகரித்து வரும் நிலையில் ரேஷன் கடைகள் மூலம் வெளி சந்தையை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி விற்பனை:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏக்கர் கணக்கான விளை பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மழையால் காய்கறிகள், நெற்பயிர்கள் செடியியே வீணாக்குவதால் சந்தையில் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை சம்பள உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
கடந்த 13ம் தேதி உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட ஆந்திரா பகுதியை நோக்கி சென்றதால் தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. திருப்பதி கோயில் உட்பட ஆந்திராவின் முக்கிய நகரங்கள் மழைநீரில் மூழ்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதனால் ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து இல்லாததால் சந்தையில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி மட்டும் இல்லை மற்ற காய்கறி விலைகளும் 80 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் அத்தியாவசிய தேவையான காய்கறிகளை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் சாலைமறியல்!
இதற்கு தீர்வு காணும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் வெளி சந்தையை விட குறைவான விலையில் தக்காளி உட்பட பிற காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளி சந்தையில் ஒரு கிலோ 150 ரூபாய் விற்பனை செய்யப்படும் தக்காளி ரேஷன் கடைகளில் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெளி சந்தைகளில் காய்கறி விலை கணிசமாக குறைந்து வருகிறது.