மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.29 முதல் அலுவலகங்கள் திறப்பு!
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது. தற்போது காற்று மாசு குறைந்துள்ளதால் வரும் திங்கட்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்கள் திறக்கப்படும் என்று டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காற்று மாசு குறைவு
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்களின் பயிர் கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதால், மேலும் தொழிற்ச்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை காற்றில் கலப்பதால் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் உள்ள மக்கள் வெளியே வர முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதனால் டெல்லி அரசாங்கம் பள்ளி, கல்லூரி மட்டும் அரசு அலுவலகங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒரு வாரம் விடுமுறை அறிவித்தது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் சாலைமறியல்!
அதனால் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களின் வேலைகளை செய்ய வேண்டும் என்று அறியுறுத்தப்பட்டுருந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்றும் அறிவித்திருந்தது. தற்போது டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டு வருவதால் அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை அன்று திறக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.26 நேர்முகத்தேர்வு!
இதனால் அரசு ஊழியர்கள் கண்டிப்பான முறையில் அலுவலகத்திற்கு வர வேண்டும். அத்துடன் டெல்லி மக்கள் தங்களின் சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரசு ஊழியர்கள் வசிக்கும் பகுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதனை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகத்திற்கு சுலபமாக வரலாம் என்றும் டெல்லி சுற்றுச்சூழல் துறை கோபால் ராய் கூறியுள்ளார்.