அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் 5G சேவை.. இந்தியாவில் இன்னும் இத்தனை நகரங்களில் அமல்!
இந்தியாவில் 5ஜி சேவை கடந்த அக் 1 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் இந்த சேவை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
5ஜி சேவை
இந்தியாவில் 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. அதன் பின் டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை, பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்நிலையில் மும்பை, டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் தசரா பண்டிகைக்கு பின் 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, சென்னை, லக்னோ, புனே, டெல்லி ஆகிய 13 நகரங்களில் 5G தொடங்கப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. அதில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் மூலம் 5ஜி சேவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாட்ஸ்அப் மூலம் இனி பாலிசியும் எடுத்துக்கலாம்! நிறுவனத்தின் புதிய அறிமுகம்!
Exams Daily Mobile App Download
2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து முக்கிய மெட்ரோ நகரங்களிலும் 5G சேவைகளை வழங்க ஏர்டெல் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 4G சிம் கொண்ட பயனர்கள் 5G இணைப்புக்கு புதிய சிம் வாங்க வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்