தமிழக அரசு துறையில் தமிழ் எழுத & படிக்க தெரிந்தால் ரூ.50,400 சம்பள வேலைவாய்ப்பு – முழு விவரம்!

0
தமிழக அரசு துறையில் தமிழ் எழுத & படிக்க தெரிந்தால் ரூ.50,400 சம்பள வேலைவாய்ப்பு - முழு விவரம்!
தமிழக அரசு துறையில் தமிழ் எழுத & படிக்க தெரிந்தால் ரூ.50,400 சம்பள வேலைவாய்ப்பு - முழு விவரம்!
தமிழக அரசு துறையில் தமிழ் எழுத & படிக்க தெரிந்தால் ரூ.50,400 சம்பள வேலைவாய்ப்பு – முழு விவரம்!

இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் உள்ள 38 காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து நாளை அதாவது 16.07.2022 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

முழு விவரம்:

தமிழகத்தில் நடப்பு வருடம், ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது , அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் இளநிலை உதவியாளர் , இளநிலை உதவியாளர் , காவலர் , உதவி பூசாரி , தொழில்நுட்ப உதவியாளர், ஓட்டுநர் உட்பட 38 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இளநிலை உதவியாளர் (01) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.மேலும் இந்த பதவிக்கு Level – 22 ன் படி, ரூ.18500-58600 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

சீட்டு விற்பனையாளர் (03) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் இந்த பதவிக்கு Level – 22 ன் படி, ரூ.18500-58600 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

திருவலகு (05) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் XIII, தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் Level – 17 ன் படி, ரூ.15900-50400 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

காவலர் (05) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் XII, தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் Level – 17 ன் படி, ரூ.15900-50400 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

பள்ளிகளுக்கு இன்று & நாளை விடுமுறை அறிவிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

பல வேலையாள் (03) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் XII, தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் Level – 16 ன் படி, ரூ.15700-50000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

ஏவலர் (02) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் Level 10 ன் படி, ரூ.10000 – 31500 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

பெருக்குபவர் (08) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் Level 10 ன் படி, ரூ.10000 – 31500 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

உதவி பரிச்சாரகர் (01) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் XV தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயிலில் நிலவும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் Level – 16 ன் படி, ரூ. 15700-50000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

மாலை கட்டி (01) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் Level -10 ன் படி, ரூ. 10000-31500 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

உதவி பூசாரி (06) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் Level -10 ன் படி, ரூ.10000-31500 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தொழில்நுட்ப உதவியாளர் (01) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் III சிவில் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் 7,950 மாத சம்பளம் வழங்கப்படும்.

ஓட்டுநர் (01) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் VI எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும், தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவிக்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும் Level- 22 18,500-58,600 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

உதவி மின் பணியாளர் (01) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பதவி தரம் V அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால்’ வழங்கப்பட்ட மின் வயர்மேன் வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவன I.T.I சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் மின் உரிம வாரியத்தின் H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் Level – 18 ன் படி, ரூ.16600-52400 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தகுதி: விண்ணப்பதாரர்கள் 15.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.மேலும் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இதையடுத்து விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் இத்துறைக்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதர நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : “உதவி ஆணையர் / செயல் அலுவலகர், அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்” என்ற முகவரிக்கு ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். மேலும் வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!