தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை – இனி பயண செலவு மிச்சம்.. மே. 1 முதல் திட்டம் அமல்!
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை முறை கொண்டுவரப்பட்டுள்ளது. எங்க திட்டம் மே 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டணம்
தமிழகத்தில் தற்போது அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமலில் இருந்து வருகிறது.இந்த நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு உதவும் வகையிலும் வருவாய் இழப்பை தடுக்கும் வகையிலும் 50% கட்டண சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க தாலி – அமைச்சர் அறிவிப்பு!
வழக்கமாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் வெள்ளி,சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மட்டுமே கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மற்ற நாட்களில் பேருந்துகள் முழுவதும் நிரம்பாமல் காலியாகவே உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கிலும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை ஈர்க்கும் வகையிலாக ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்தால் 6 – வது முறை பயணத்தின் போது கட்டணத்தில் இருந்து 50% மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகளுக்கு பேருந்து கட்டணம் மிச்சமாகும். ஒரு மாதத்தில் 6 – வது முறையாக பயணம் செய்வதற்கு மட்டுமே இந்த கட்டண சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் விடுமுறையை முன்னிட்டு பலரும் தங்களை சொந்த ஊர்களுக்கு பயணிப்பர். இதனை கருத்தில் கொண்டு இந்த புதிய கட்டண சலுகை திட்டம் மே 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.