அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் & பொறியியல் கல்லூரிகளில் 5% இட ஒதுக்கீடு – மாநில அரசு அறிவிப்பு!
அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியலில் படிப்புகளில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடுகளை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியலில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது இதன் மூலமாக பலரும் அரசு பள்ளிகளை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர். இதே போல் அசாம் மாநில அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள், அஸ்ஸாம் அரசு பள்ளிகளில் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 5% இட ஒதுக்கீடுகளை பெறுவார்கள் என்று நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடையும் டெங்கு காய்ச்சல் – தீவிர நடவடிக்கை!
மேலும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இந்த வசதியை பெற முடியாது என்றும், மாநில கல்வி வாரியத்துடன் இணைந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் அசாம் மாநிலத்தில் 12 ம் வகுப்பு தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் மற்றும் 75% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதற்காக அமைச்சரவையில் முன்னதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்றும், முதல்வர் தெரிவித்துள்ளார். மாநில அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.