தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடையும் டெங்கு காய்ச்சல் – தீவிர நடவடிக்கை!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் சுகாதாரத்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல்:
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தெருக்களில் நீர் தேங்கி டெங்கு பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் 1000 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நாள்தோறும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
படுக்கை வசதி உடன் கூடிய வந்தே பாரத் ரயில் – மாடல், தயாரிக்கப்படும் இடம், தேதி குறித்த முழு விவரம்!
இவ்வாறு, தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலால் கூடிய விரைவில் பொது மக்களுக்கென கடும் விதிமுறைகள் விதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், சுகாதார ஆய்வாளர்கள் டெங்கு காய்ச்சல் காரணமாக வீட்டிற்கு ஆய்வுக்கு வரும் போது கொசு புகும் வண்ணம் ஏதேனும் கிடங்குகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கட்டாயமாக வீட்டு சுற்றுப்புறத்தை கொசுக்கள் வராத வண்ணம் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.