வங்கி ஊழியர்களின் 5 நாள் ஊதியம் நிவாரணமாகிறது …!! “அரசு உத்தரவு”..!!!

0
வங்கி ஊழியர்களின் 5 நாள் ஊதியம் நிவாரணமாகிறது …!! “அரசு உத்தரவு”..!!!

கேரள மாநிலம் வயநாட்டில், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் உண்டான வெள்ளப்பெருக்கின் காரணமாக, அங்கு கோர நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மண்ணில் புதைந்து, வாழ்வாதாரம் இழந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து , தற்போது கேரள அரசு வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.

எட்டாத உயரத்தில் தங்கம் விலை – இனி வரும் காலங்களில் நகை வாங்க முடியுமா?

ஊழியர்களின் 5 நாள் ஊதியம்;

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரில் சிக்கி உயிரிழந்தோர், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தோர்களின் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, கேரள மாநிலத்திற்கு சொந்தமான கேரள வங்கி , முதல்வர் திரு. பினராயி விஜயன் அறிவித்த பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளதையொட்டி, தற்போது அங்கு பணியாற்றி வரும் வங்கி ஊழியர்களின் 5 நாள் ஊதியத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!