45வது செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம்.. தங்கம் வெல்வாரா பிரக்ஞானந்தா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணிக்கான ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோரும், மகளிர் பிரிவில் ஹரிகா, வைஷாலி உள்ளிட்டோரும் களம் இறங்குகின்றனர். கடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடந்த போது ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வெண்கல பதக்கத்தை வென்றனர். இம்முறையும் நமது வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
WTC புள்ளி பட்டியலில் முன்னேறிய இலங்கை.. இந்தியாவின் நிலை என்ன??


























