போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு – மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்!
மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த மாநில அரசின் ஒப்புதல் தற்போது வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மகாராஷ்டிரா மாநிலத்தில் போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் மாநகராட்சியாக உள்ள போக்குவரத்து கழகத்தை மாநில அரசின் கீழ் இணைப்பதற்காக பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். மாநில அரசின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பலன்கள் மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துக் கழகத்தின் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக பேருந்துகளில் அதிரடி மாற்றம் – அமைச்சர் புதிய அறிவிப்பு!
இது குறித்து பேசிய முதல்வர் மாநில போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி அளிப்பதன் மூலம் மாநில அரசுக்கு கூடுதலாக ஒன்பது கோடி ரூபாய் நிதி சுமை ஏற்படும். போக்குவரத்து கழகத்தை மாநில அரசோடு இணைப்பதை அரசு நிராகரித்தாலும் அவர்களுக்கான அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு நிகராக அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம் எஸ் ஆர்டிசி ஊழியர்களுக்கு 34 % அகவிலைப்படி உயர்வில் 4 % கூடுதலாக பெற்று தற்போது 38 % வழங்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா முதல்வரின் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.