மாநில அரசு ஊழியர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு – 5% DA அதிகரிப்பு!
பண்டிகை காலத்தை முன்னிட்டு மாநில அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசை பின் தொடர்ந்து மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானா அரசு சாலை போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இது குறித்து தெலுங்கானா அரசு மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் பேசியுள்ளார்.
மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை கண்காட்சி – அக்.7 ஆம் தேதி முதல் ஏற்பாடு!
அதில், ஊழியர்களுக்கு 4.8% அகவிலைப்படி உயர்வு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த டிஏ உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், போக்குவரத்து ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்துடன் DA உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பளத்துடன் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். சிறந்த தரமான சேவைகளை பயணிகளுக்கு இவர்கள் வழங்கி வருகின்றனர். எனவே ஊழியர்களின் நலன் கருதி அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.