தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – மத்திய அரசு அனுமதி!

0
தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் - மத்திய அரசு
தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் - மத்திய அரசு
தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – மத்திய அரசு அனுமதி!

தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி:

தேசிய மருத்துவ ஆணையம் மூலம் தமிழகத்தின் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகளின் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், பயோ மெட்ரிக் வருகை பதிவேடு கடைபிடிக்காமல் இருப்பது, சிசிடிவி கேமரா முறையாக கடைபிடிக்காமல் இருப்பது, பயோ மெட்ரிக் ஆதார் பதிவு இணைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்பட்டு, சான்றிதழ் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலைமையம் எச்சரிக்கை!

அதன்படி, தேசிய மருத்துவ குழு இந்த மருத்துவமனைகளுக்கு மீண்டும் வந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு, இந்த 3 மருத்துவ கல்லூரிகளுக்கும் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு, தடையில்லா சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் எழுத்துபூர்வமான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும், தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!