தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலைமையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலைமையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலைமையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலைமையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு நகரின் பலவேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

கனமழை

தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கிய நிலையில் அது தென்தமிழக பகுதிகளிலும் பரவி நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருந்து வருகிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுவதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

UGC NET Phase – I தேர்வு தேதி 2023 – வெளியீடு!

மேலும், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், இன்று முதல் ஜூன் 12-ம் தேதியும் வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்திலும் சுறாவளிக்காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!