இந்தியாவில் 12% வரை ஊதிய உயர்வை எதிர்பார்க்கும் ஊழியர்கள் – ஆய்வில் தகவல்!

0
இந்தியாவில் 12% வரை ஊதிய உயர்வை எதிர்பார்க்கும் ஊழியர்கள் – ஆய்வில் தகவல்!

இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 19% ஊழியர்கள் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரைக்கும் ஊதிய உயர்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு

ஒவ்வொரு வருடமும் ஊழியர்கள் தங்களது நிறுவனங்களிடமிருந்து பணி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 17 நாடுகளில் 32,000 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் பேரில் கிட்டத்தட்ட 83 சதவீத ஊழியர்கள் அடுத்த 12 மாதங்களில் சம்பள உயர்வை எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமே பத்தில் ஒன்பது பேர் ஊதிய உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், 19 சதவீத ஊழியர்கள் ஒரு வருடத்திலேயே 10 முதல் 12 சதவீதம் வரைக்கும் ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது – கூட்டுறவுத்துறை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்!

மேலும், சில ஊழியர்கள் ஊதிய உயர்வு இல்லாவிட்டாலும் சில வகையான போனஸ் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் ஆகியவற்றை விரும்புவதாக இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமே 44 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களுக்கு குறைவான ஊதியம் கிடைப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல், தகவல் தொலை தொடர்பு துறைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் தொழில் சம்பந்தமான நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் அதிகமான பணி உயர்வு வழங்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!