இந்திய தபால் நிலையத்தில் அருமையான திட்டம் – 10 வருடங்களில் பணம் இரட்டிப்பாகும்! உடனே சேரவும்!
இந்திய தபால் நிலையத்தில் பத்து வருடங்களிலேயே முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்தான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திர திட்டம்
சம்பாதித்த பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்து லாபத்தை ஈட்ட நினைக்கும் முதலீட்டுக்காரர்களுக்கு கிசான் விகாஸ் பத்திர திட்டம் லாபகரமான திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக முதலீடு செய்த பணத்தை 120 மாதங்களில் அதாவது 10 ஆண்டுகளிலேயே இரட்டிப்பாக்க முடியும். கடந்த டிசம்பர் 2022 ஆம் ஆண்டில் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தின் வட்டி விகிதம் கிட்டத்தட்ட 1.10% வரைக்கும் உயர்த்தப்பட்டது இந்த வட்டி விகிதம் உயர்வின் காரணமாக மூன்று மாதத்திற்கு முன்பாகவே இரட்டிப்பு பணத்தை பெற முடியும்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – கால தாமதம்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!
மேலும், இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் சேர்ந்து தங்களது பணத்தை இரட்டிப்பாக விரும்பும் முதலீட்டாளர்கள் 1000 ரூபாயிலிருந்து முதலீடு செய்ய தொடங்கலாம். மேலும், இந்த திட்டத்தில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து கணக்கை தொடங்கலாம். இது மட்டுமல்லாமல் 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் பாதுகாவலர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக்கு முன்பாகவே இறந்து விட்டால், அந்தப் பணம் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பதையும் முன்பாகவே முதலீட்டாளர்கள் நாமினியை தேர்வு செய்து கொள்ளலாம்.