தமிழக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – நவ.1 சிறப்பு முகாம்.. விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் சேர ஏதுவாக அந்தந்த கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
உதவித்தொகை:
தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளி படிப்பை தொடர்ந்து கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி கற்க அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் இடைநிற்றல் இன்றி உயர்கல்வியை தொடர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் இருந்து வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை அரசு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்வி உதவி திட்டமாக அரசு மாற்றபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே பயன் பெற முடியும். இத்திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் இந்த திட்டத்தில் சேர ஏதுவாக அந்தந்த கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமானது அடுத்த மாதம் நம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு முகாம் – பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
தற்போது நடைபெறப்போகும் இந்த முகாம் வாயிலாக புதுமை பெண் திட்டத்தில் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கடந்த முறை பதிவு செய்யத் தவறிய 2 மற்றும் 3 ம் ஆண்டு கல்லூரி மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முகாமிற்கு வரும் மாணவிகள் உரிய சான்றுகளை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.