தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு முகாம் – பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல்வேறு காரணங்களால் உயர்க்கல்வியில் சேரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு உதவும் வகையிலும் ஆலோசனை வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த 2021 – 2022 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களில் சிலர் அடுத்த கட்டமாக உயர்கல்வி கற்க கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ந்த போது மாணவர்களின் குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, சொந்த தொழில் செய்தல், வறுமை, படிப்பில் ஆர்வமின்மை, தங்கள் வசிக்கும் பகுதிகளில் கல்லூரிகள் இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்கள் கூறப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் உயர்கல்வியில் சேராத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்கள் வாயிலாக அவர்களை தொடர்பு கொண்டு பள்ளிக்கல்வித்துறை அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியது. அதனை தொடர்ந்து மாணவர்களிடம் உள்ள குறைகளை கேட்டறியவும் அவர்களை உயர் கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளிகள் மூலம் சிறப்பு முகாம்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
வருமான வரி கணக்கு தாக்கல் இன்னும் நீங்கள் செய்யவில்லையா? கவலை வேண்டாம்! காலக்கெடு நீட்டிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உயர்கல்விக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தாக மூன்றாவது சிறப்பு முகாம் வரும் அக்.28ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் உயர்கல்வியில் சேரமால் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டு உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.