வருமான வரி கணக்கு தாக்கல் இன்னும் நீங்கள் செய்யவில்லையா? கவலை வேண்டாம்! காலக்கெடு நீட்டிப்பு!
2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு வருகிற 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வருமான வரி
வருமான வரி கணக்கு குறித்த அறிக்கையை ஒரு வணிகம் அல்லது தொழிலின் கணக்குகள், ரசீதுகள், விலைப்பட்டியல்கள் மற்றும் பலவற்றைச் சரிபார்த்தல், மதிப்பாய்வு செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றை பட்டயக் கணக்காளரால் மேற்கொண்டு தயாரித்து தாக்கல் செய்திட வேண்டும். மேலும் வருமான வரி தாக்கல் செய்வோர் தங்களிடம் இருக்கும் இருப்புநிலை மற்றும் லாபம் மற்றும் நஷ்டம் உள்ளிட்ட கணக்குகளை பட்டய கணக்காளர் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முதன் முதலில் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வரி செலுத்துவோர் மற்றும் பிற பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவித்தது.
நகைப்பிரியர்களுக்கு மீண்டும் ஹாப்பி நியூஸ் – நாளுக்கு நாள் குறையும் விலை!
Follow our Instagram for more Latest Updates
அதன்பின்பு மீண்டும் ஒரு முறை கால அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதி அன்று வரை CBDT நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மீண்டும் ஒரு முறை கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நவம்பர் 7ம் தேதி வரை நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். இது தொடர்பான சுற்றறிக்கையை www.