பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை திட்டமிட்ட தேதியை விட தள்ளி வைக்குமாறு அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வி வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுத்தேர்வு:
பஞ்சாப் பள்ளி கல்வி வாரியம் ஆனது 2023 – 24ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணைகளை முன்னதாக வெளியிட்டது. வழக்கமாக பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு மார்ச் மாதம் தொடங்கி நடத்தப்படும். ஆனால் நடப்பு ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 13ஆம் தேதி தேர்வு தொடங்கி மார்ச் 6ஆம் தேதி முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 30 ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பள்ளி கல்வி இயக்குனர், கல்வி அமைச்சர் மற்றும் டி பி ஐ ஆகியவர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 29ஆம் தேதி முடிவடையும் என்றும், பிப்ரவரி 13ஆம் தேதி பொதுத்தேர்வு நடத்துவது அவர்களுக்கு மன உளைச்சலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி தேர்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவிக்கும்போது, விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.