புவி அறிவியல் மாநாடு 2025 சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய தீர்வுகள் குறித்து

0
???? ???????? ?????? 2025 ????????????? ???????????? ????? ????????? ????????
புவி அறிவியல் மாநாடு 2025 சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய தீர்வுகள் குறித்து

புவி அறிவியல் மாநாடு 2025 சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய தீர்வுகள் குறித்து

சென்னை: உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்கள், நிலநடுக்கம், வெப்பமண்டல மாற்றம் போன்ற பிரச்சகளை எதிர்கொள்ளும் நோக்கில் “புவி அறிவியல் மாநாடு 2025”  சென்னை நகரில் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கல்வி அனைமைச்சகம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று தங்களது ஆய்வு முடிவுகளை பகிர்ந்து வருகின்றனர். புவியின் அடிநில வளங்கள், நீர்வள மேலாண்மை, வானிலை மாற்றங்கள் ஆகியவற்றில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து பல புதிய கருத்துகள் வெளியிடப்பட்டன.

‘டிஜி லாக்கரில்’ தான் இனி ‘மைக்ரேஷன் சர்டிபிகேட்’ – மாணவர்களுக்கு புதிய வசதி!

மாநாட்டின் இரண்டாம் நாளில் “பசுமை புவி – நிலையான எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில், சுத்தமான ஆற்றல் பயன்பாடு,  கடல்சார் ஆராய்ச்சி, மற்றும்  குளிமாற்றத்திற்கான செயற்கை நுண்ணறிவு தீர்வுகள்  குறித்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்காக சிறப்பு தொழில்நுட்ப கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவி அறிவியல் துறையில் இந்தியா உலக அளவில் தன்னுடைய பங்களிப்பை அதிகரிக்கவுள்ளதாக மாநாட்டில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!