
நீங்க இது தெரியுமா வங்கியில் பணத்தை டெபாசிட் செய்கிறீர்களா..?? ” அப்போ, வருமான வரித்துறை ரெய்டு வருவது நிச்சயம்”..!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருப்பது என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மேலும், அவர்கள் சேமிக்கும் பணம் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியில் டெபாசிட் செய்து வருகிறார்கள். இந்நிலையில், சிலருக்கு வங்கியில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை. அப்படி நீங்கள் வரம்புக்கு மீறி பணத்தை டெபாசிட் செய்யும் போது வருமான வரித் துறையின் கீழ் கண்காணிக்கப்படுகிறீர்கள். எனவே, வங்கிகளில் பணத்தை எந்த அளவிற்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை கீழே விரிவாக காண்போம் வாருங்கள்.
அதாவது, மத்திய நேரடி வரிகள் வாரியம்(CBDT)-ன் கீழ் 1 நிதியாண்டில்(ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை), ஒரே நேரத்தில் 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் அல்லது வங்கியிலிருந்து பெறுகிறீர்கள் என்றால், உங்கள் வங்கி கணக்குகளை சம்பந்தப்பட்ட வங்கிகள் வருமான வரித்துறையிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். மேலும், கூடுதல் பணபரிவார்த்தைகளை மேற்கொள்ளும் நபர்களின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், ரூ. 50,000 டெபாசிட் செய்கிறீர்கள் என்றாலும் பான் கார்டு கட்டாயம் தேவைப்படும். குறிப்பாக, 269ST சட்டப்பிரிவின் கீழ், ஒரே நாளில் ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பண பரிவர்தனைகளுக்கு RBI தடை விதித்துள்ளது.


























