பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் மனிதர்கள் – மே 1 சர்வதேச உழைப்பாளர் தினம்!!
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் தேதியில் சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி ஒவ்வொரு நாட்டின் தூணாக விளங்கும் உழைப்பாளர்களுக்கு நம் கௌரவங்களை செலுத்துவோம்.
உழைப்பாளர் தினம்
பல நாடுகளில் மே 1 சர்வதேசிய தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை மரியாதையை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே தினம் கொண்டாடப்படுகிறது. வளர்ந்த உலக நாடுகள் பல மே 1 அன்று தான் உழைப்பாளர்கள் தினத்தை அனுசரித்து வருகிறது. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் தங்களது நாட்டின் உழைப்பாளர்களை கௌரவித்து வருகிறது. மேலும் மே 1 தேசிய பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது
ஒவ்வொரு தொழிலாளர்கள் என்றால் ஒரு நாளில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு என்பதை மொத்தமாக செயல்படுத்துவது தான். மற்ற நாடுகளை விட, இந்தியா தன் நாட்டின் உழைப்பாளர்களுக்கு அதிகளவு முன்னுரிமை கொடுத்து வருகிறது. தொழிலாளர் தினத்தின் தோற்றத்தை திரும்பி பார்க்கையில் இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதியில் இருந்து தொழிலாளர் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிலாளர் தினம் பல உலக தொழிலாளர் அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் சென்னை மாநகரம் தான் முதன்முதலாக தொழிலாளர் தினத்தை அறிமுகப்படுத்தியது.
TN Job “FB Group” Join Now
கடந்த 1923 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதியான ம. சிங்காரவேலர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவை கொண்டாடினார். மேலும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும், கௌரவப்படுத்தும் நோக்கத்திலும் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் ஆட்சி காலத்தில் சென்னை மெரினா கடற்கரையில் ‘உழைப்பாளர் சிலை’ அமைக்கப்பட்டது. நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் உழைக்கும் ஒவ்வொரு உழைப்பாளர்களுக்கும் நாம் நமது வணக்கத்தையும் நன்றியையும் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.