மே 8 வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் தற்போது நடைமுறையில் இருக்கும் இரவுநேர ஊரடங்கை மே 8ஆம் தேதி வரை மேலும் நீட்டிப்பதாத மாநில அரசு அறிவித்துள்ளது.
இரவுநேர ஊரடங்கு:
கொரோனா வைரஸின் இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல் புதிய பதிவு செய்யப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் வரை பலி எண்ணிக்கை ஏற்படுகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் தோறும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தெலுங்கானா மாநிலத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அம்மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 7646 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,606 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் அங்கு கடந்த 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரைஅமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஊரடங்கு இன்றுடன் (ஏப்ரல் 30) முடிவடையும் நிலையில் இரவுநேர ஊரடங்கை மேலும் நீட்டிப்பதாக தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறை மே மாதம் 8 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரவுநேர ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் தவிர பிறவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தவிர அவசியம் இல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மே 8 வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!
WORK FROM HOME முறையில் 1 பில்லியன் டாலர் சேமித்த Google நிறுவனம் – ஆய்வில் தகவல்!!
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் தற்போது நடைமுறையில் இருக்கும் இரவுநேர ஊரடங்கை மே 8ஆம் தேதி வரை மேலும் நீட்டிப்பதாத மாநில அரசு அறிவித்துள்ளது.