9 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு !!
கொரோனா பரவல் காரணமாக ஹரியானாவில் 9 மாவட்டத்தில் இரவு நேர முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பினை கீழே அறிந்து கொள்ளலாம்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இரவு நேர முடக்கம் :
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்த்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்குகளை அறிவித்து தொற்றை கட்டுப்படுத்த முயல்கிறது.
TN Job “FB Group” Join Now
பல மாநிலங்களும் தங்களுக்கேற்ப கட்டுப்பாடுகளை குறைத்தும் அதிகரித்தும் வருகின்றன. இதை தொடர்ந்து தற்போது கொரோனா இரண்டாம் பரவல் அதிகரிப்பதால் ஹரியானா மாநிலத்தில் 9 மாவட்டங்களுக்கு இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. பஞ்ச்குலம், குருகிராம், கர்னல், சிர்சா, சோனிபட் போன்ற 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு முடக்கம் அமலில் இருக்கும் எனவும் மே 3 ம் தேதி வரை நீடிக்கும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் வழக்கம் போல அப்பகுதியில் அத்தியாவசிய பொட்களுக்கு தடை இருக்காது எனவும் மருந்து கடைகள் இயங்கும் எனவும் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு போட்டால் குறைய வாய்ப்பு