WORK FROM HOME முறையில் 1 பில்லியன் டாலர் சேமித்த Google நிறுவனம் – ஆய்வில் தகவல்!!
கடந்த ஆண்டு உலகமெங்கிலும் பரவிய கொரோனா தொற்று காரணமாக பல அலுவலகங்கள் WORK FROM HOME முறையை கையில் எடுத்தது. இந்த சேவைகள் மூலம் Google நிறுவனம் 1 பில்லியன் டாலர் பணத்தை சேமித்துள்ளது.
Google நிறுவனம்
கடந்த வருடம் திடீரென்று பேரதிர்வாக உருவாகிய கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பல ஸ்தம்பித்து போனது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பொருளாதார இழப்பும் ஏற்பட்டது. பல முன்னணி நிறுவனங்கள் இதுவரை இல்லாத ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் போன்றவை தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும்படி அனுமதித்தது.
பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் மனிதர்கள் – மே 1 சர்வதேச உழைப்பாளர் தினம்!!
இந்த WORK FROM HOME முறை காரணமாக கூகுள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்களை சேமித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், கூகுள் பணியாளர்கள் கடந்த ஆண்டு அதிகமான பயணங்களை மேற்கொள்ளவில்லை. தவிர விளம்பரங்கள் மற்றும் பொழுதுபோக்கு போன்றவைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த 1 வருடமாக உலகம் முழுவதும் உள்ள கூகுள் அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் சேமிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக கூகுள் நிறுவனம் உலகளவில் 1.3 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களுடன் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கிலும் கொரோனா தொற்று சொல்லக்கூடிய அளவுக்கு குறைந்து வந்ததும், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டுமாக பணியில் அமர்த்தியது. ஆனால் கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரக்கூடிய சூழல் தென்பட்டால் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகங்களில் பணியார்களை அமர்த்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.