என்னங்க சொல்றீங்க..!! ஆதார் கார்டை வைத்து ATM-ல பணம் எடுக்கலாமா..? அது எப்படி வாங்க பார்க்கலாம்..!!
இந்திய மக்கள் அனைவருக்கும், மிக முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. மேலும், அத்தகைய ஆதார் கார்டை பயன்படுத்தி ATM கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம் என்பதை பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இந்திய தேசியக்கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய ஆதார் இணைக்கப்பட்ட கட்டண (AEPS) முறையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை ஆதார் கார்டு மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
உங்களுக்கு 18 வயது ஆயிடுச்சா..!!அப்போ இதுல முதலீடு செஞ்சா ரூ.17 லட்சம் உங்களுக்குத்தான்..!!
- முதலில், தபால் நிலையத்தில் உள்ள மைக்ரோ ஏடிஎம் சேவை மையத்திற்கு செல்லவும்.
- பிறகு, உங்கள் ஆதார் நம்பரை முகவரிடம் கொடுத்து, உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, கைரேகை அல்லது கருவிழி ஸ்கேனிங்-கை பயன்படுத்தி பயோமெட்ரிக் அங்கீகாரத்தை வழங்கவும்.
- நீங்கள் எடுக்க விரும்பும் பணத்தொகையை குறிப்பிட்டு, கடைசியாக அது அங்கீகரிக்கப்பட்டதும், நீங்கள் பண பரிவர்த்தனை செய்ததற்கான சான்றையும் பெறுவீர்கள்.
மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
























