அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரம் 3 முட்டை விநியோகம் – அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு 3 முட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு முட்டை
புதுச்சேரியில் அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வாரம் 3 முட்டை வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2023-24 ஆம் கல்வியாண்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கான பாதுகாப்பு வகுப்புகள் – செயற்பொறியாளர் தகவல்!
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின் இன்று முதல் மாணவர்களுக்கு முட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கி இருக்கிறது. புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்ஷயா பாத்திரம் என்ற தொண்டு அமைப்பு மதிய உணவை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சைவ உணவுகளை மட்டுமே வழங்குவதால் ஏற்கனவே மதிய உணவு வழங்கி வந்த மத்திய உணவு சமையல்கூடங்கள் மூலம் முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி புதுவையில் உள்ள 293 பள்ளிகளுக்கு வாரம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் முட்டைகள் விநியோகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.