தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கான பாதுகாப்பு வகுப்புகள் – செயற்பொறியாளர் தகவல்!
தமிழக மின்வாரியத்தின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகளை விளக்கமாக எடுத்துரைக்கும் விதமாக பாதுகாப்பு வகுப்புகளை மின்வாரிய அதிகாரி நடத்தியுள்ளார். இந்த வகுப்பில் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு:
தமிழக அரசு மிகவும் ஆபத்து நிறைந்த மின்வாரிய துறையின் பணியாளர்களை மிகவும் கவனமாக பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்கள் அனைத்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பிறகு தான் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இப் பராமரிப்பு பணிகளின் போது ஏதேனும் எதிர்பாராத விபத்துகள் நடக்கும் போது அதற்கு உயர் அதிகாரிகளே பொறுப்பாக எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இதனால் மின்வாரிய அதிகாரிகள் இது குறித்து கூடுதல் கவனத்துடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற கூட்டம் பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் மின்வினியோக பாதுகாப்பு குறித்து ஊழியர்களுக்கு உதவி செயற்பொறியாளர் சின்னசாமி அவர்கள் வகுப்பு எடுத்துள்ளார். வகுப்பில் காற்று திறப்பான்களை திறக்கும் பொழுதும் மூடும் போதும் ஊழியர்கள் கட்டாயம் கையுறைகளை பயன்படுத்த வேண்டும். மின் பாதைகளில் பணிபுரியும் பொழுது மின்வினியோகத்தை நிறுத்தி நில இணைப்பு செய்து அதன் பின்னர் பணி புரிய வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு – ஜூலை 21 முதல் துவக்கம்!
தென்மேற்கு பருவக்காற்று தற்போது வீசி வருவதால் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற மரக்கிளைகளை அப்புறப்படுத்தி தடங்கல் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். மேலும் மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றும் பொழுது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.