மழை வடிகால்களில் கழிவு நீர் – அதிகாரிகள் ஆய்வு.. மாநகராட்சி விடுத்த முக்கிய எச்சரிக்கை!
சென்னையில் மழைநீர் வடிகால்களில் சிலர் சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகளை அமைத்துள்ளதாக புகார்கள் வந்தது. இந்த நிலையில் சென்னை வாசிகளுக்கு மாநகராட்சி முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கழிவுநீர் இணைப்பு:
சென்னையில் மழை காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மழை நீர் செல்ல ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது மண்டல வாரியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி மலைப்பாதை One Way – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்த மழை நீர் வடிகால்களில் குடியிருப்பு வாசிகள் சிலர் கழிவுநீர் இணைப்புகளை அமைத்து மழை நீர் செல்ல வேண்டிய பாதையில் கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சட்டவிரோதமாக மழைநீர் வடிகால் கழிவுநீர் இணைப்பு உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து சட்ட விரோதமாக மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேறுபவர்களுக்கு மாநகராட்சி சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை 15 மண்டங்களில் சுமார் ரூ. 5,70,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இனியும் இந்த தவறை செய்தால் அபராதத்துடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.