வேலைவாய்ப்பு என்பது நாளுக்கு நாள் அரிதாகி விட்ட நிலையில் தற்போது வியக்க வைக்கும் வகையிலான பணி குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
வேலைவாய்ப்பு:
நாளுக்கு நாள் பொருளாதார மந்த நிலை அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது. இதனால் கிடைக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக பலரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக கருதப்பட்டு வரும் அண்டார்டிகாவில் புதிய வேலை வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC Civil Judge திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் – சற்றுமுன் வெளியீடு!
அதாவது அண்டார்டிகா கண்டத்தின் போர்ட் லோக்ரோய் பகுதியில் உள்ள பென்குயின்களை எண்ணி தகவல் அளிப்பதற்கு ஆட்கள் தேவை என்று தனியார் அறக்கட்டளை ஒன்று விளம்பரம் செய்துள்ளது. இப்பணி 2024 நவம்பர் முதல் 2025 மார்ச் மாதம் வரை இருக்கும் என்றும் இதற்காக ஐந்து நபர்கள் தேவைப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.