மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் பதிவு கட்டாயம் – அதிரடி உத்தரவு!!
மாநிலத்தில் மாணவர்களுக்கிடையே வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளதால் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வாக்காளர் பதிவு கட்டாயம் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பதிவு
மகாராஷ்டிராவில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் ஒன்று ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் கூறியிருப்பதாவது, மாநிலத்தில் தேசியக் கல்விக் கொள்கையின்படி, வருகிற ஜூன் 2023ம் ஆண்டு முதல் 4 வருட பட்டப் படிப்பை அரசு அறிமுகப்படுத்தும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடைமுறையை பல்கலைக்கழகங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் 4 ஆண்டு பட்டப்படிப்பை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தவில்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கையானது தற்போது 32 லட்சம் மட்டுமே உள்ளது. இதனை 50 லட்சமாக அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.- இது தான் காரணம்!
Exams Daily Mobile App Download
மேலும் தற்போது மாநிலத்தில் மாணவர்கள் மத்தியில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அதிகப்படுத்தும் வகையில் மாநிலத்தில் கல்லூரிகளில் சேரும் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயமான முறையில் வாக்காளர் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.