தமிழகத்தில் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.- இது தான் காரணம்!
தமிழகத்தில் 2022-23ம் கல்வியாண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வருகிற 28ம் தேதி அன்று நடைபெற இருந்தது. இந்த நிலையில் இக்கலந்தாய்வை ஒத்திவைப்பதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அரசு/நகராட்சி/மேல்நிலை பள்ளிகளில் 01.08.2022 அன்று நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் இருக்கும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பதவியில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் பணிநிரவல் மூலமாக நியமனம் செய்யப்படுவார்கள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனை தொடர்ந்து இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28ம் தேதி அன்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு வருகிற 29ம் தேதி அன்றும் EMIS என்ற இணையதளத்தின் வாயிலாக பணிநிரவல் ( BT Deployment Counselling ) கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு – மின்சாரவாரியம் முடிவு!
Exams Daily Mobile App Download
இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் வருகிற 28ம் தேதி அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநிரவல் ( BT Deployment Counselling ) கலந்தாய்வு மட்டும் நிர்வாக காரணத்திற்காக வருகிற டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு அறிவித்தபடி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.