ரோகினி வாழ்க்கையில் என்ட்ரி கொடுத்த வில்லன்.. உண்மை வெளியே வருமா – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், விஜயா வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரோகினி வாழ்ந்து கொண்டிருக்க, மீண்டும் வில்லன் வசீகரன் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை:
சிறகடிக்க ஆசை சீரியலில், விஜயா வீட்டில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருவதால், மனோஜ் மீது இருந்த நல்ல எண்ணம் ரோகிணிக்கு சிறிது சிறிதாக மாற இருக்கிறது. இந்நிலையில் ரோகிணி வாழ்க்கைக்கு ஆப்பு வைக்க மீண்டும் வில்லன் வர இருக்கிறார். அதாவது இதுவரை கோமாவில் இருந்த வசீகரன் மீண்டும் எழுந்து கொண்டார். அவர் எழுந்து முதல் வேலையாக விஜயாவிற்கு போன் செய்கிறார்.
தமிழகத்தில் 2 நாட்கள் ஒயின் ஷாப்களுக்கு விடுமுறை – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!
ரோகிணியின் மலேசியா மாமா பேசுவதாக வசீகரன் சொல்ல, அதை ரோகிணியிடம் சொல்ல சொல்கிறார். ரோகிணி அதை கேட்டு அதிர்ச்சி அடைய விஜயாவிற்கு சந்தேகம் வருகிறது. அடுத்தடுத்த எபிசோடுகளில் வசீகரன் உண்மையை சொல்வாரா அல்லது ரோகிணியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நினைத்ததை முடிப்பாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.