விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், விஜயாவிற்கு முத்து மீது என்ன கோவம் என்பது குறித்த பிளாஷ்பேக் வர இருக்கிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், விஜயா தன்னுடைய மகன் முத்துவை இந்த அளவிற்கு வெறுக்க என்ன காரணம் என தெரியாமல் மீனா குழப்பத்தில் இருக்கிறார். முத்து இந்த அளவிற்கு அம்மா பாசத்திற்காக ஏங்குகிறார் என்பதால், அவருக்கு விரைவில் அது கிடைக்க வேண்டும் என அவர் முடிவு செய்கிறார். அப்போது முத்துவின் பிளாஷ்பேக் பற்றி பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். அதாவது முத்து, மனோஜிற்கு பின் விஜயாவிற்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு.. பிப்.29 வரை கால அவகாசம் – தவறினால் நடவடிக்கை!
முத்து, மனோஜ் அந்த குழந்தையுடன் கிராமத்திற்கு வந்து இருக்கிறார்கள். அப்போது விளையாட சென்ற இடத்தில் மனோஜ் அந்த குழந்தையை ஆற்றில் தள்ளிவிடுகிறார். அந்த குழந்தை மூச்சு விட முடியாமல் இறந்து விட அப்போது மனோஜ் முத்து மீது பழியை போடுகிறார். விஜயாவும் அதை நம்பி விடுகிறார். முத்து செய்யாத தவறுக்கு ஜெயிலுக்கு செல்வதுடன். அம்மா பாசம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். இந்த உண்மையை விஜயா தெரிந்து கொள்ள வேண்டும் என மீனா செய்ய போகும் காரியம் எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.