ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு.. பிப்.29 வரை கால அவகாசம் – தவறினால் நடவடிக்கை!

0

ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு.. பிப்.29 வரை கால அவகாசம் – தவறினால் நடவடிக்கை!

இமாச்சல பிரதேச அரசு ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.29 வரை காலக்கெடுவை நீடித்துள்ளது.

காலக்கெடு நீட்டிப்பு

இமாச்சல பிரதேச அரசு ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. அது மட்டுமில்லாமல் இ-கேஒய்சி (வேண்டும் மற்றும் ரேஷன் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த வேலைகளை செய்ய பிப்.29 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கால அவகாசம் நீடிக்கப்படாமல் இருந்த நிலையில், பலர் தங்கள் தகவல்களை பதிவு செய்யாமல் இருந்தனர்.

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை; ரூ 47,000 ஐ தாண்டி விற்பனை – இன்றைய அப்டேட்!

அதனால் அவர்களுக்கு வசதியாக தேதியை நீட்டிக்க அரசு முடிவு செய்து இருப்பதாக உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக அரசின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் ஒரு நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுகளுடன் இணைக்கத் தவறினால், அவர்களின் ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!