தூங்க முடியாமல் கஷ்டப்படும் மீனா ஐஸ்வர்யா.. இருவருக்கும் குறுக்கே வரும் பார்வதி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவும் ஐஸ்வர்யாவும் கூட்டணி சேர்ந்து நன்றாக தூங்க திட்டமிடுகின்றனர். அவர்கள் ரூமில் தூங்க நினைக்க ஆனால் அங்கே பார்வதி இருக்கிறார். பின் இருவரும் சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை போடுகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவை எழுப்பி விட இரவெல்லாம் தூங்காமல் இருந்ததால் அசதியாக இருப்பதாக சொல்கிறார். பின் ஐஸ்வர்யாவை கூட்டணி சேர்த்து ரூமில் சென்று தூங்கலாம் என சொல்கிறார். ஐஸ்வர்யாவும் சரி என சொல்ல, ஆனால் பார்வதி ரூமில் தூங்கி கொண்டிருக்கிறார். அப்போது இருவரும் வந்து பார்வதியை எழுப்ப ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடனே இருவரும் திட்டமிட்டு பார்வதியை எழுப்புகின்றனர். வெளியே பயங்கரமாக சண்டை நடப்பதாக சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டு இருவரும் தூங்க நினைக்கிறார்கள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பார்வதி வெளியே வந்து பார்த்துவிட்டு எதுவும் நடக்கவில்லை என்பதை உணர்கிறார். பின் ஐஸ்வர்யா மீனா தூங்க ஐஸ்வர்யா என்ன சத்தமே இல்லை என கேட்கிறார். மீனா நான் எப்படி வசதியாக இருந்தேன் இப்படி கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறதே என மீனா சொல்கிறார். பின் பார்வதி வந்து பார்க்க ஐஸ்வர்யா மீனா தூங்கி கொண்டிருக்கின்றனர். இதற்கு தான் என்னை வெளியே அனுப்புனீங்களா என அவர் நினைக்கிறார். என் மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்க அதனால் தான் இப்போ தூங்க இடம் இல்லாமல் கஷ்டப்படுறீங்க என நினைத்து கொள்கிறார்.
பின் தனம் கண்ணனை குளிக்க சொல்கிறார். அப்போது மீனா ஐஸ்வர்யா வர முல்லை சரியாக தூங்கவில்லையா என கேட்க ஆமாம் இது ரொம்ப பழைய வீடாக இருக்கிறது. நீங்க அங்கே வந்துவிடுவீர்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என நினைத்ததாக மீனா சொல்ல, உடனே பார்வதி உங்க அப்பா தான் இரவு என பார்க்காமல் வெளியே அனுப்பியதாக பார்வதி சொல்கிறார். பின் மீனா வேற வீடு போகலாம் என நினைத்து தான இரவு பேசினோம் என கேட்க, ஜீவா புது வீடு கட்டி செல்லும் வரை இங்கே தான் இருக்க போகிறோம் என சொல்கிறார்.
மூர்த்தி ஒரு 4 5 மாசம் மட்டும் தான் என சொல்ல, அது வரை இங்கே இருக்க வேண்டுமா எனகேட்கிறார். பின் தனமும் 5 மாசம் தான் சரியாகிவிடும் என சொல்ல, மூர்த்தி உனக்கு வேண்டும் என்றால் வேற வீடு பார்க்கலாம் என மீனாவிடம் சொல்கிறார். ஆனால் ஜீவா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் மீனாவும் ஐஸ்வர்யாவும் குளிக்க சண்டை போடுகின்றனர். அப்போது பார்வதி வந்து நான் குளிக்க போகிறேன் என சொல்லி உள்ளே செல்கின்றனர். இருவரும் குளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கின்றனர். மீனா எனக்கு மட்டும் பாத்ரூம் பிரச்சனை முடியவே மாட்டேங்குது என புலம்ப, ஐஸ்வர்யா மீனாவை நக்கல் அடிக்கிறார்.
தமிழகத்தில் நாளை (நவ. 19) சனிக்கிழமை பள்ளி & கல்லூரிகள் செயல்படும் – அரசு உத்தரவு!
பின் மீனா மாமா வீடு கட்டி முடிக்க 5 மாசம் ஆகும் என சொல்கிறார். ஆனால் 8 மாதம் ஆகிவிடும் என மீனா சொல்ல, பார்வதி குளிக்க விடமாட்டேங்குறீங்க என கேட்கிறார். பின் ஐஸ்வர்யா புது வீடு கட்டும் போது எல்லாருக்கும் தனியாக பாத்ரூம் கட்ட வேண்டும் என சொல்கிறார். பின் பார்வதி குளித்துவிட்டு வர மீனா நான் குளிக்க போகிறேன் என போகிறார். அப்போது கண்ணன் வேகமாக குளிக்க போகிறார். இருவரும் மீண்டும் குளிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.