தமிழகத்தில் நாளை (நவ. 19) சனிக்கிழமை பள்ளி & கல்லூரிகள் செயல்படும் – அரசு உத்தரவு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதற்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளை (நவ. 18) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் செயல்படும்:
தமிழக மக்கள் சார்பில் தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்ச கணக்கில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்தார்கள். அவர்களுக்கு பயணம் செய்ய வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அக்டோபர் 25 ஆம் தேதி அனைவரும் மீண்டும் சொந்த ஊரில் இருந்து திரும்ப இருந்தனர்.
அவர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அக். 25 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் அந்த நாளுக்கு பதிலாக வேறு தினத்தில் வேலைநாளாக செயல்படும் என தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் அக். 25 ஆம் தேதிக்கு பதிலாக நாளை (நவம்பர் 19) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.