முல்லை குழந்தைக்கு வந்த ஆபத்து.. இனி நடக்க போவது என்ன? – வெளியான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தில் முல்லைக்கு பெரிய ஆபத்து ஒன்று வர இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கடன் வாங்கியதால் பல பிரச்சனைகள் வருகிறது. அதில் இருந்து மீண்டு வந்தாலும், கண்ணனும் ஐஸ்வர்யாவும் மீண்டும் வீட்டிற்குள் வந்தது மூர்த்திக்கு பிடிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு கஸ்தூரி பணம் வாங்கி கொடுத்து அவரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இதற்கிடையே முல்லை கதிருக்கு பெரிய பிரச்சனை ஒன்று வர இருக்கிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வெறும் ரூ.10 ரூபாயில் முடித்திருத்தம் – குவியும் பாராட்டுக்கள்!
அதாவது முல்லையை கதிர் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அப்போது ரத்தினம் பழைய ஹோட்டல் பகையை மனதில் வைத்து கொண்டு நடுவே வண்டியை கொண்டு வந்து முல்லை மீது ஏற்றிவிட, கீழே விழுந்த முல்லைக்கு வயிற்றில் அடிபட்டு விடுகிறது. அதனால் அவர் வழியில் துடிக்க, கதிர் அவரை மருத்துவமனையில் சேர்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த எபிசோடுகள் அடுத்த வாரம் வர இருக்கிறது.