தனியார்துறையில் இளைஞர்களுக்கு 2.77 லட்சம் வேலைவாய்ப்புகள் – முதல்வர் உறுதி!
மாநில அரசு மேற்கொண்டுள்ள முயற்சியால் மாநிலத்தின் அதிக முதலீடுகள் குவிய துவங்கியுள்ளதாகவும், இதனால் தனியார் துறைகளில் 2.77 லட்சம் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புகள்:
நாடு முழுவதும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கி தரப்படுகிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பிற நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மான், அரசு பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே 29,000 பேருக்கு பல்வேறு அரசு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளார்.
முல்லை குழந்தைக்கு வந்த ஆபத்து.. இனி நடக்க போவது என்ன? – வெளியான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!
இது குறித்து பெருமையாகவும், திருப்தி அளிப்பதாகவும் கூறியுள்ளார். அரசு வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மாநில அரசு தனியார் துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் மாநிலத்திற்கு ரூ.48,000 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும், இதனால் 2.77 லட்சம் பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்.