பாக்கியா தொழில் ஏற்பட்ட நஷ்டம்.. கை கொடுக்குமா குடும்பம்? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இதுவரை வெற்றியை பார்த்த பாக்கியாவிற்கு தொழிலில் பெரிய நஷ்டம் வர இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வர குடும்பம் உதவி செய்யுமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா கோபியை பிரிந்த பின், அவர் எடுத்த காரியம் எல்லாம் வெற்றி பெற்றது. அதனால் அவரும் தொழிலில் ஒவ்வொரு படியாக முன்னேறி இருக்கிறார். தற்போது அவர் ராதிகாவின் அலுவலகத்தில் கேன்டீன் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாக்கியா காலேஜ் சென்ற நேரம், செல்வி கேண்டீனை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. அதனால் ஏகப்பட்ட பணம் நஷ்டம் அடைகிறது.
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!
இதை கேட்டு மனம் உடைந்த பாக்கியா செல்வியை பயங்கரமாக திட்டுகிறார். பாக்கியா எப்போது கஷ்டப்படுவார் என ராதிகாவும், கோபியும் ஆசை பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த பெரிய நஷ்டத்தை பாக்கியா எப்படி சமாளிக்கிறார். அவருக்கு துணையாக குடும்பம் இருக்குமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.