பாக்கியா என் மனைவி.. பழனியை எச்சரிக்கும் கோபி.. இனி நடக்கப் போவது என்ன? – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா-பழனி நட்பை பார்த்து சந்தேகப்படும் கோபி அவரிடம் இனிமேல் பாக்கியாவிடம் பேச கூடாது என எச்சரிக்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், பழனிக்கு எப்படியாவது கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என பாக்கியா பெண் பார்க்கிறார். ஆனால் படிப்பை காரணமாக வைத்து அவருடைய கல்யாணம் நிற்கிறது. அதனால் பழனிக்கும், பாக்கியாவிற்கும் இடையே மன வருத்தம் அதிகமாக இருக்கிறது. தன்னால் தான் பழனிக்கு இந்த நிலைமை வந்துவிட்டது. அதனால் அவருடைய மனதை சரி செய்ய வேண்டும் என பாக்கியா பல முயற்சிகளை செய்கிறார்.
ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் – பொருட்கள் வழங்குவதும் சிக்கல்!
ஆனால் அது எல்லாம் கோபிக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கும் கோபி இருவரும் இப்படி நெருங்கி பழகியதை பார்த்து, கோவத்தின் உச்சிக்கே செல்கிறார். ஏற்கனவே பாக்கியா திருமணம் செய்தால் உங்களுக்கு என்ன என ராதிகா கேட்டிருக்கும் நிலையில், கோபி இப்படி நடந்து கொள்வது இருவருக்கும் சண்டையை அதிகமாக்குகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும் கோபி பழனியிடம் நேரடியாக சென்று இனிமேல் பாக்கியா உடன் பேசாதே என எச்சரிக்க, உடனே அதை கேட்க நீங்க யார் என பழனி சண்டையிடுகிறார். அப்போது பாக்கியா என் மனைவி என்று கோபி உரிமையுடன் சொல்வாரா என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.