பாக்கியாவை வெறுக்கும் இனியா.. வாய்ப்பை சாதகமாக்கும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ஸ்கூல் பர்ஸ்ட் வந்ததை நினைத்து மிகுந்த சந்தோஷத்தில் குடும்பம் இருக்க, அந்த சந்தோஷத்தில் பாக்கியா பங்கு பெறவில்லை. அதனால் இனியா கோவப்பட்டு கோபி உடன் மீண்டும் சென்று விடுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், இனியா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதனால் குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். ஏற்கனவே இனியா ரிசல்ட் வரும் போது நீ கூட இருக்க வேண்டும் என சொல்கிறாள். ஆனால் பாக்கியாவிற்கு வேலை இருக்க அதனால் அவரால் வர முடியாமல் போகிறது. இந்நிலையில் இனியாவிற்கு ஏரியா மக்கள் பாராட்டு விழா நடத்துகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அதில் கோபி-ராதிகா ஜோடியாக கலந்து கொண்டு இனியாவை நினைத்து பெருமைப்படுகின்றனர். கோபி இனியா உடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க, அந்த நேரம் பாக்கியா வேகமாக வருகிறார். பாக்கியா இனியாவை பார்த்து பெருமைப்பட்டு அருகே சென்று கூப்பிடுகிறார். ஆனால் இனியா பாக்கியா மீது பயங்கர கோவத்தில் இருக்க, அவருடன் பேசவில்லை.
பால் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு – ஆக. 1 முதல் அமல்.. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
இந்த வாய்ப்பை கோபி சாதகமாக பயன்படுத்தி இனியாவை தன் வீட்டிற்கு அழைக்கிறார். இனியா அம்மா உடன் போவாரா? அப்பா உடன் போவாரா? என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.